Friday, April 26, 2013

PROTEST DEMONSTRATION ON 29.04.2013 FOR 7TH CPC AND WITHDRAWAL OF PFRDA BILL

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !

எதிர் வரும் ஏப்ரல் 29 . 2013 அன்று  7 ஆவது ஊதியக் குழு வேண்டியும் , புதிய பென்ஷன்  திட்டத்தை கைவிட வேண்டியும் , நம்முடைய கோரிக்கைகளை ஏற்று , CONFEDERATION  மற்றும் NFPE உடன் ,  ரயில்வே துறையின்  மிகப் பெரிய சம்மேளனமான  AIRF ,  மற்றும் பாதுகாப்புத் துறையின்  மிகப் பெரிய சம்மேளனமான AIDEF  ஆகியவை  ஒன்றுபட்ட , நாடுதழுவிய அளவிலான  கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.  

எனவே தமிழக NFPE  இணைப்புக் குழுவின் சார்பில்  அனைத்து மாநிலச் செயலர்களும் இந்தப்  போராட்டத்தை  அனைத்து கோட்ட/ கிளைகளிலும் சிறப்பாக நடத்திட  வேண்டுகோள்  விடுத்துள்ளனர் .  அதற்கான சுற்றறிக்கை கீழே தரப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் உள்பட அனைத்து கோட்ட/ கிளைகளிலும்  தனித்தனியே  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திட வேண்டுகிறோம் அந்தந்தப் பகுதியில் உள்ள மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அமைப்புடன்  தொடர்பு கொண்டு  இந்தப் போரட்டத்தை சிறப்பிக்க வேண்டுகிறோம்.  இந்த வலைத் தளத்தை பார்க்கும்  தோழர்கள் அந்தந்தப் பகுதியில்  பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு  போராட்டம் சிறக்க  ஆவன செய்திட வேண்டுகிறோம்.