Thursday, June 27, 2013

சமீபத்திய கோட்ட மாநாடுகள் - புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் !



00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
பொள்ளாச்சி கோட்டமாநாடு :-

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று பொள்ளாச்சி கோட்டத்தின்  36 வது  கோட்ட மாநாடு பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் உள்ள TELC  பள்ளியில் 23.06.2013  அன்று சிறப்பாக நடைபெற்றது


.கோட்டத்தலைவர் தோழர் K. ஜெயராஜ்  அவர்கள தலைமை தாங்கி நடத்தி கொடுக்க தோழர் .D.எபினேசர் காந்தி மாநில துணைத்தலைவர் ,தோழர் C.சஞ்சீவி கோவை மண்டல செயலர் ஆகியோர்  மாநில சங்கத்தின் சார்பில் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் தேர்வில் கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக நடப்பு ஈராண்டிற்கான  நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டனர் .

தலைவர்                       :தோழர் K ஜெயராஜ் 


செயலாளர்                   :தோழர் R.அய்யாசாமி 

நிதிச் செயலாளர்        :தோழர் A.ஹாரூன் பாஷா 



 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000



அண்ணா சாலை  கிளை மாநாடு :-


அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று அண்ணா சாலை கிளையின்  மாநாடு  26.06.2013  அன்று  அண்ணா சாலை தலைமை  அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.  தோழர்K.K.லோகய்யா  அவர்கள தலைமை தாங்கி நடத்தி கொடுக்க நம்முடைய முன்னாள்   பொதுசெயலாளர் தோழர் K.V.ஸ்ரீதரன்  அவர்கள்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள  தோழர் J . ஸ்ரீ வெங்கடேஷ்  மாநில தலைவர், ,தோழர் J.ராமமூர்த்தி ,மாநில செயலாளர் ,தோழர் A.வீரமணி மாநில நிதிச் செயலாளர் ,தோழர் .S .K .ஜேக்கப் ராஜ்  மாநில உதவி செயலாளர் உள்ளிட்ட பல நிர்வாகிகள்   கலந்து கொண்டனர். 

நிர்வாகிகள் தேர்வில் கீழ் கண்ட தோழர்கள் நடப்பு ஈராண்டிற்கான   நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டனர் .


தலைவர்                       :தோழர்.E.K. தாமஸ் 


செயலாளர்                   :தோழர்.S.வெங்கடேசன் 

நிதிச் செயலாளர்        :தோழர்.ஜெயவேலு

   
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


மதுரை  கோட்ட மாநாடு :-


அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று மதுரை கோட்ட   மாநாடு 26.06.2013  அன்று  மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில்  சிறப்பாக நடைபெற்றது.  கோட்டச் சங்கத் தலைவர் தோழர் R.தமிழ்செல்வன்    அவர்கள்  தலைமை தாங்கி நடத்தி கொடுக்க முன்னாள் மாநிலச் செயலர்  தோழர் .S.சுந்தரமூர்த்தி   அவர்கள்கலந்து கொண்ட மாநாட்டில் கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டனர் .



தலைவர்                       :தோழர்.R.தமிழ்ச்செல்வன் 


செயலாளர்                   :தோழர்.R .முருகேசன் 

நிதிச் செயலாளர்        :தோழர். K.நாராயணன்  



00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


புதிய நிர்வாகிகளின்  பணி  சிறக்க  
மாநிலச் சங்கத்தின்  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !