Monday, July 1, 2013

பற்றி எரிகிறது பாண்டிச்சேரி !

பற்றி எரிகிறது பாண்டிச்சேரி ! 
38 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 09.07.2013அன்று 
ஒரு நாள் வேலை நிறுத்தம் ! 
NFPE /FNPO  சங்கங்களின் அஞ்சல் மூன்று , 
அஞ்சல் நான்கு போர்க்கொடி !

பாண்டிச்சேரி கோட்டத்தில் தொழிலாளர் படும் அவதி குறித்தும் , முது நிலைகோட்ட கண்காணிப்பாளரின் அலாதி மெத்தனம் குறித்தும் கோட்ட 
NFPE /FNPO  சார்ந்த சங்கங்களின் சுற்றறிக்கைகளை கீழே பார்க்கவும் .

கடந்த 29.06.2013 அன்று  PMG, CCR (ADDL CHARGE - PMG MM) அவர்களிடம்  அஞ்சல் மூன்று மாநிலச் செயலரும் ,RMS  மூன்று  மாநிலச் செயலரும் , 
RMS  CB  DIVISION  இல் தீடீரென்று கிட்டத்தட்ட 85 OUTSIDER  களை    நீக்கியதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து  விரிவான பேச்சு 
வார்த்தை  நடத்தினர் . 

(தற்போது பிரச்சினை  தீர்க்கப்பட்டு  கடந்த சனி இரவு முதல்  RESTORE
 செய்யப் பட்டு  பணிகள் சீரடைந்தன ) 

அப்போது அஞ்சல் மூன்றின்  மாநிலச்  செயலர் , பாண்டிச்சேரி கோட்டத்தின் வேலைநிறுத்தம் குறித்து  PMG அவர்களுடன் விவாதித்த போது  , PMG , CCR  அவர்கள்  இன்று மாலை (01.07.2013)   NFPE /FNPO  மாநிலச் செயலர்களுடனும்  கோட்டச் செயலர்களுடனும்  இது குறித்து  
பேச்சு வார்த்தை நடத்திட  நேரம் அளித்துள்ளார் . இது குறித்து  உடன் 
OFFICIAL COMMUNICATION ம் அளிக்கப் .பட்டது .  
RMS பிரச்சினை தீர்க்கப்  பட்டது போல  பாண்டிச்சேரி கோட்டப் பிரச்சினையும்  PMG , CCR  அவர்களின் தலையீட்டினால்  
தீர்த்து வைக்கப் படும் என்று  நம்புகிறோம் .