Tuesday, August 19, 2014

SIRKALI BRANCH CONFERENCE HELD ON 17.08.2014

சீர்காழி அஞ்சல் மூன்று கிளையின் 8 ஆவது ஈராண்டு மாநாடு கடந்த 17.08.2014 அன்று சீர்காழி தலைமை அஞ்சலக வளாகத்தில்  கிளைத் தலைவர் தோழர். R . ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .  அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J . R . அவர்கள் சம்மேளனக்  கொடியை ஏற்றிவைக்க, சீர்காழி அஞ்சல் மூன்றின்  முன்னாள் கிளைச் செயலர்  தோழர். S . ஜானகி ராமன் அவர்கள் வரவேற்புரையாற்ற மாநாடு இனிதே  துவங்கியது . அஞ்சல் மூன்றின் கிளைச் செயலர் தோழர். N . நடராசன் அவர்கள்  ஈராண்டு அறிக்கை சமர்ப்பிக்க , கிளையின் நிதிச் செயலர் தோழர். T. கோவிந்தராஜன் அவர்கள்  வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார். அதன் பின்னர் நிர்வாகிகள் தேர்தல்  ஒரு மனதாக நடைபெற்றது .  நடப்பு ஈராண்டு களுக்கான புதிய நிர்வாகிகளாக கீழ்க் கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

கிளைத் தலைவர் : தோழர். R . ராமமூர்த்தி , SPM , AK CHATRAM  S .O .
கிளைச் செயலர் : தோழர் . N . நடராசன் , APM, சீர்காழி  HPO
நிதிச் செயலர் : தோழர். T. கோவிந்தராஜன் , S .A ., சீர்காழி HPO.

மாநாட்டில்  மாநிலச் செயலர்,  இலாக்காவின் இன்றைய நிலை , நமது போராட்டங்கள் , மாநிலச் சங்கத்தின் செயல்பாடு , ஏழாவது ஊதியக் குழுவில் நாம் சமர்ப்பித்துள்ள கோரிக்கை மனு, அதன் மீது நடவடிக்கைகள்  குறித்து சிறப்புரையாற்றினார்.  

சீர்காழி கிளையின்  அஞ்சல் நான்கு செயலர் தோழர். ராஜேந்திரன்,  அஞ்சல் மூன்று கிளை முன்னாள் செயலர் தோழர். செல்லதுரை, 
முன்னாள் அஞ்சல் நான்கு செயலர் தோழர். மணி,  மயிலாடுதுறை அஞ்சல் மூன்றின் முன்னாள் கோட்டச் செயலர் தோழர். ஊமைதுரை , மயிலாடுதுறை அஞ்சல் மூன்றின் முன்னணித் தோழர்கள் . K . துரை  மற்றும்  P . ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினார்.  இறுதியாக தோழர். கோவிந்தராஜன் நன்றியுரையுடன்  மாநாடு இனிதே நிறைவுற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள். மாநாட்டில் எடுக்கப் பட்ட  சில புகைப்படங்களை கீழே பார்க்கலாம் .

(குறிப்பு :- PMG, CR  உடன் இருமாதங்களுக்கு ஒரு முறையான பேட்டி கடந்த 18.08.2014 அன்று திருச்சியில் நடைபெற்றது.  ஊழியர் தரப்பில் மாநிலச் செயலர் தோழர். J .R ., மற்றும் மண்டலச் செயலர் தோழர். R . குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.  பேட்டியின் விபரம் MINUTES  நகல் பெற்றவுடன் வெளியிடப்படும் )