Monday, September 29, 2014

DIAMOND JUBILEE CELEBRATIONS OF NFPE AT CHENNAI CITY SOUTH DIVISION ON 24.09.2014 A GRAND SUCCESS !

தென் சென்னை அஞ்சல் மூன்று  மற்றும் அஞ்சல் நான்கு கோட்டச் சங்கங்களின் சார்பாக நமது சம்மேளனத்தின் வைர விழா கருத்தரங்கு நிகழ்ச்சி கடந்த 24.09.2014 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் துவங்கி சென்னை  புனித தாமஸ் மலை  தலைமை அஞ்சலகத்தில் (ST. THOMAS MOUNT)  வெகு சிறப்பாக நடைபெற்றது. 

வைர விழா நிகழ்வுக்கு அஞ்சல்மூன்றின்  கோட்டத் தலைவர் தோழர் வாசுதேவன் அவர்களும் அஞ்சல் நான்கின் கோட்டத் தலைவர்  தோழர். ராஜன் அவர்களும் கூட்டுத் தலைமையேற்று நடத்தினர்.  அஞ்சல்மூன்றின் கோட்டச் செயலர் தோழர் . ராஜேந்திரன் அவர்கள் மற்றும் அஞ்சல் நான்கின் கோட்டச் செயலர் தோழர். பார்த்தசாரதி அவர்கள் இருவரும்  முன்னிலை வகிக்க , தென் சென்னை கோட்ட மகிளா  கமிட்டியின் கன்வீனர் தோழியர். நாகலட்சுமி அவர்கள்  இனிய வரவேற்புரையாற்றினார். 

வைர விழா நிகழ்வில்  தென் சென்னை கோட்டத்தின்  ஒய்வு பெற்ற சங்க முன்னோடிகள் அனைவரும்  வரவழைக்கப் பட்டு  தலைவர்கள் மூலம் சால்வை  அணிவிக்கப் பட்டு நினைவுப் பரிசும் வழங்கப் பட்டு கௌரவிக்கப் பட்ட நிகழ்வு மிகவும் சிறப்பாக  அமைந்தது.

விழா நிகழ்வில்  நமது சம்மேளனத்தின் முன்னாள் மா பொதுச் செயலர் தோழர் K . R  . அவர்கள்  நமது அஞ்சல் தொழிற்சங்க வரலாறு என்ற தலைப்பில்  நமது சம்மேளனத்தின் தியாக வரலாற்றை எடுத்துரைத்தார். 
.
நமது  அஞ்சல் மூன்று அகில இந்திய சங்கத்தின் பொதுச் செயலர் தோழர். 
N .S . அவர்கள் இலாக்காவின் இன்றைய நிலையையும் நாம் எதிர் கொள்ள வேண்டிய  சவால்கள் மற்றும் தொழிற் சங்கத்தின் கடமை குறித்து சிறப்புரையாற்றினார்.  

நமது அகில இந்திய சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலர் தோழர் K .V .S . அவர்கள்  ஏழாவது ஊதியக் குழு முன் நாம் வைத்துள்ள கோரிக்கை மனு குறித்தும் அதனை நிறைவேற்றிட நாம் மேற்கொள்ள வேண்டிய  போராட்டங்கள் குறித்தும் தெளிவாக சிறப்பான உரையை நமக்கு அளித்தார். 

மற்றும்  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R ., அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். ரவிச்சந்திரன், GDS  சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் , அஞ்சல் மூன்று மாநில சங்கத்தின் உதவித் தலைவரும் தென் சென்னை கோட்டச் சங்க முன்னாள் உதவித் தலைவருமான தோழர். வெங்கட்ராமன் , சென்னை GPO அஞ்சல் மூன்று செயலர் தோழர். முரளி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

NFPE  வைர விழா நிகழ்வு வெகு சிறப்பாகவும் விமரிசையாகவும் தென் சென்னை கோட்டத்தில் நடைபெற்றது என்றால் அது மிகையாகாது.  இரவு உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் அனைத்தையும்   மிகச் சிறப்பாகச் செய்திருந்த  அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். N . ராஜேந்திரன் , அஞ்சல் நான்கு கோட்டச் செயலர் தோழர். பார்த்தசாரதி மற்றும்  தென் சென்னை கோட்டத்தின் அனைத்து தோழர்களுக்கும் மாநிலன்ச் சங்கத்தின் வாழ்த்துக்களையும்   நன்றியையும்  அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

விழா நிகழ்வில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்களை உங்களின் பார்வைக்கு கீழே தருகிறோம்.