Monday, September 1, 2014

FORMING NEW UNION UNDER NFPE IN TAMILNADU CIRCLE- AIPCPC&CWF

அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.நமது NFPE  சம்மேளனத்தின் கீழ் ஏற்கனவே அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, RMS மூன்று, RMS  நான்கு, ACCOUNTS , ADMIN , SBCO , GDS  என்ற எட்டு சங்கங்கள் உள்ளன . 

புதிதாக அஞ்சல் , RMS  ஓய்வூதியர் சங்கம் கடந்த மாதம் வேலூரில்  தனது அகில இந்திய மாநாட்டை நடத்தியது உங்களுக்குத் தெரியும். மேலும் அகில இந்திய காசுவல் , பார்ட் டைம் , கண்டிஜென்ட் , CONTRACT WORKERS சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அதன் முதல் தமிழ் மாநில மாநாடு   எதிர் வரும் 06.10.2014 அன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெற உள்ளது. எனவே தங்கள் பகுதியில் உள்ள அனைத்து காசுவல் , பார்ட் டைம் , கண்டிஜென்ட் , CONTRACT   ஊழியர்களையும் இதில் உறுப்பினராக்கிட , எதிர் வரும்  முதலாம் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ளச் செய்ய வேண்டுகிறோம். மாநாடு வெற்றி பெற தமிழ் மாநில அஞ்சல் மூன்றாம் பிரிவின் சார்பில்  இதய பூர்வமான  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.