Tuesday, October 28, 2014

TN JCA PROGRAMME OF ACTION ON 39 POINT CHARTER OF DEMANDS

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !

நம்முடைய மத்திய அஞ்சல் JCA  முடிவின் படி, 39 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி மூன்றாவது கட்டமாக  தார்ணா  போராட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது தெரிந்ததே . தலைமட்ட சூழ்நிலை மற்றும் மழைக் காலம் காரணமாக   தமிழக  அஞ்சல் JCA  வில்   இந்த மூன்றாவது கட்ட போராட்டத்தை முழுமையாக  நடத்திட இயலவில்லை . 

எனவே  39 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (29.10.2014) மதியம்  தமிழக அஞ்சல் துறைத் தலைவர் அலுவலக (O /O  CHIEF  PMG, TN ) வாயிலில் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்திட NFPE  மற்றும் FNPO  சங்கங்களின்  தமிழக JCA வால்  முடிவெடுத்து அறிவிக்கப் பட்டிருக்கிறது. 

எனவே  அனைத்து பகுதி சங்கங்களைச் சேர்ந்த கோட்ட/ கிளைச சங்க  மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள்  தங்கள் பகுதி ஊழியர்களை பெருமளவில் திரட்டி இந்த  உணவு இடைவேளை ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க   வேண்டுகிறோம்.

இவண் 
தமிழக அஞ்சல் JCA , சென்னை 600 002.