Wednesday, November 5, 2014

CHENNAI GPO BRANCH CONFERENCE AND DIAMOND JUBILEE CELEBRATIONS - A GRAND SUCCESS

சென்னை GPO அஞ்சல் மூன்று கிளையின் 41 ஆவது கோட்ட மாநாடு மற்றும் NFPE  சம்மேளனத்தின் வைரவிழா நிகழ்வு கடந்த 28.10.2014 அன்று மாலை சென்னை GPO  வளாகாத்தில்  அதன் கிளைத் தலைவர் தோழர். V . நோம்புராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கிளையின் உதவிச் செயலாளர் தோழர்.G . ராஜாராமன்  வரவேற்புரை நிகழ்த்த , கிளையின் செயலாளர் தோழர். K . முரளி  ஈராண்டு அறிக்கையினை  சமர்ப்பிக்க , கிளையின் நிதிச் செயலர் தோழர். M . சந்திரசேகர் நிதி நிலை அறிக்கையினை சமர்ப்பித்தார். பின்னர்  கிளையின்  நடப்பு ஈராண்டுக்கான  நிர்வாகிகள் தேர்தல் போட்டியின்றி நடைபெற்றது.  கீழ்க் கண்ட தோழர்கள்  புதிய நிர்வாகிகளாக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். 

கிளைத் தலைவர் : தோழர். V . நோம்புராஜ் , P.A., சென்னை GPO

கிளைச் செயலர் : தோழர். K . முரளி , P .A ., சென்னை GPO

நிதிச் செயலர்     : தோழர். M . சந்திரசேகரன் , P .A ., சென்னை GPO

இதனைத் தொடர்ந்து  NFPE  சம்மேளனத்தின் வைரவிழா நிகழ்ச்சி கிளைத் தலைவர் தோழர். நோம்புராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.  வைரவிழா நிகழ்வில் மத்திய அரசின் சுகாதாரத் துறை முன்னாள் CABINET  அமைச்சரும் , சென்னை GPO அஞ்சல் மூன்று கிளையின்  முன்னாள் செயலரும் ஆகிய திரு.  தலித் எழில்மலை அவர்கள்  கலந்துகொண்டு தன்  தொழிற் சங்க அனுபவங்களை பகிர்ந்துகொண்டது  ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது.  

மேலும் அஞ்சல் மூன்றில் முன்னாள் பொதுச் செயலர் தோழர். K.V.S., அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R ., மாநிலத் தலைவர் தோழர். J .ஸ்ரீவெங்கடேஷ்,  மாநில நிதிச் செயலர்  தோழர்.A . வீரமணி, மாநில உதவித் தலைவர் தோழர் .V . வெங்கட்ராமன்,  சென்னை GPO வின் CHIEF  POSTMASTER  திரு. A . குப்புசாமி அவர்கள் சென்னை GPO வின் DY  CHIEF  POSTMASTER  திரு. M .B . ஷாஜஹான்  அவர்கள்  ஆகியோர்  கலந்து  கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். 

சென்னை GPO கிளையின் முன்னாள் செயலர் தோழர். M . கணபதி,  முன்னாள் உதவித் தலைவர்கள் தோழர். K . சண்முகம் ,தோழர். N . குமாரசாமி  உள்ளிட்ட மூத்த  தோழர்களுக்கும்  இதர தலைவர்களுக்கும் GPO கிளையின் சார்பில் வைரவிழா நினைவுப் பரிசு  வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவில் வடசென்னை, அண்ணா சாலை, FOREIGN  POST , மத்திய சென்னை, தென் சென்னை , அம்பத்தூர்  கிளைகளின் செயலர்கள்/ நிர்வாகிகள் மற்றும்  மாநில மகிளா  கமிட்டி நிர்வாகிகள் அஞ்சல்  நான்கு மற்றும் FNPO  சம்மேளனத்தின்  நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசிய நிகழ்வு  விழாவின் சிறப்பிற்கு மேலும் மெருகூட்டும் விதம் அமைந்தது. நிகழ்ச்சியில் சுமார் 150 தோழர்கள்/ தோழியர்கள் இறுதிவரை கலந்துகொண்டது வெகு சிறப்பாக  அமைந்தது.

இந்த வைரவிழா நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த   தோழர். முரளி  தலைமையிலான சென்னை GPO கிளையின் நிர்வாகிகளுக்கும், புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மாநிலச் சங்கத்தின்  மனமார்ந்த வாழ்த்துக்கள்.  விழா நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே காணலாம் :-