Tuesday, March 31, 2015

AT LAST WE GOT THE ORDERS FOR PAYMENT OF SALARY/PENSION ON 01.04.2015

நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் இடைவிடாத முயற்சி காரணமாக இன்று மதியம் 03.00 மணியளவில்  கர்நாடகா CPMG  அவர்களால் தமிழ் நாடு , கர்நாடகா  மற்றும் கேரளா மாநிலங்களுக்கு எதிர்வரும் 01.04.2015 அன்று ஊதியம் மற்றும்  பென்ஷன்  வழங்கிட உத்திரவு வெளியிடப்பட்டது.  

ஆனால்  தமிழகத்தில் இந்த உத்தரவு சற்றே நிறுத்தி வைக்கப்பட்டது.  SeniorAO  அவர்கள் எழுப்பிய  QUERY காரணமாக  இந்த உத்திரவை வெளியிடுவதில்  சிக்கல் ஏற்பட்டது.  இது குறித்து   SR . AO  விடம்  நம் அஞ்சல் மூன்று மாநிலச் செயலர்  பேசியதன்  விளைவாகவும் மீண்டும் நமது   கர்நாடகா மாநிலச் சங்கம் மூலம் பிரச்சினையை  எடுத்துச் சென்றதன் விளைவாகவும் இறுதியாக  சுமார் 05.30 மணியளவில்  இந்த உத்திரவு வெளியிடப்பட்டது.  

எனினும் நம்முடைய மாநிலச் செயலர்  தொலைபேசியில் பேசிய பின்னர்  இந்த உத்திரவை வெளியிட முன்வந்த   கர்நாடகா CPMG  திரு. M .S ராமானுஜன்  அவர்களுக்கு  நம் மாநிலச் சங்கத்தின் நன்றியை  தெரிவித்துக் கொள்கிறோம். உத்திரவின் நகலை கீழே  பார்க்கவும் .