Monday, March 9, 2015

MOBILISE IN LARGE ! SERVING OF STRIKE NOTICE WITH THE CPMG, TN BY TN NFPE COC ON 10.03.2015 FOLLOWED BY LUNCH HOUR DEMONSTRATION IN FRONT OF O/O CPMG, TN


அடக்குமுறையை எதிர்த்து , 
தொழிலாளி அடிமைப்படுத்தப் படுவதை எதிர்த்து , 
தொழிற்சங்க பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி, பணியிடத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி ,
 ஒழுங்கான கணக்கீட்டில் காலிப் பணியிடங்களை நிறைவேற்றக் கோரி ,

 CBS /CIS சேவைகளை சீர்படுத்தக் கோரி, 
அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS , கணக்குப் பிரிவு, 
நிர்வாகப் பிரிவு, GDS உள்ளிட்ட அனைத்து பிரிவு ஊழியர்களின் 
தேங்கிக் கிடக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, 

 தமிழகம் தழுவிய அளவில் போர்ப் பரணி !
இது உரிமைக்கான யுத்தம் !
உழைக்கும் வர்க்கத்தை அடிமையாக நினைக்கும் 
சில அதிகார மையங்களுக்கு  நம் உணர்வைக் காட்டும் யுத்தம் !
_________________________________________________________________________________
26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் !
10.03.2015 மதியம் CHIEF PMG 
அலுவலகம் முன்பாக 
உணவு இடைவேளை ஆர்பாட்டம் !
ஆர்ப்பாட்ட முடிவில் சட்ட பூர்வமான 
வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குதல் !
_________________________________________________________________________________


தோழனே வா ! தோள் கொடுக்க வா !            வீ ரனே வா வீறு கொண்டு வா !
"கடித்து அழிக்க வரும் கட்டெறும்பை
எதிர்கொண்டு வேர்விடும்விதை.
அரித்துத்தின்ன வரும் கரையானை
முறியடித்து தலைநிமிரும் வேர்.
ஆடுமாடுகள் மிதித்தும் அடங்காமல்
வேலியோரம் மெல்ல முன்கை உயர்த்தும் செடி.
பசையற்ற வேலி முள்ளை அப்படியே பற்றிக் கொண்டு
குடிசையின் உச்சியில் போய்
சொந்தமாய் பூக்கும் பறங்கிப் பூவின் அழகு !
உனக்கும் வேண்டுமா?
போராடிப் பார்! "