Sunday, April 26, 2015

STRIKE MEETING CONDUCTED AT CHENNAI ON 25.04.2015

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். நேற்று (25.04.2015) மாலை 06.00 மணியளவில் சென்னை CHIEF  POSTMASTER  GENERAL  அலுவலக வளாகத்தில் 06.05.2015 முதல் நடைபெற உள்ள  அஞ்சல் JCA  வின் காலவரையற்ற வேலை நிறுத்தத் தினை ஒட்டி சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு தமிழக அஞ்சல் JCA  வின் தலைவரும் FNPO  அஞ்சல் நான்கின் மாநிலச் செயலருமான  தோழர். குணசேகர் அவர்கள் தலைமை வகித்தார். தமிழக அஞ்சல் JCA  வின் கன்வீனரும்  NFPE  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலருமான  தோழர். J . இராமமூர்த்தி  முன்னிலை வகித்து வரவேற்புரை யாற்றினார்.  கூட்டத்தில் FNPO  சம்மேளனத்தின் மாபொதுச் செயலர் தோழர். D. தியாகராஜன் , NFPE  சம்மேளனத்தின் உதவி மாபொதுச்  செயலர் தோழர். S .ரகுபதி, AIPEU  GDS  NFPE  சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர்.P .பாண்டு ரங்கராவ் ஆகியோர்  கலந்து கொண்டு வேலை நிறுத்தத்தின் காரணங்களை விளக்கிப் பேசினர்.

நம்முடைய இலாக்காவின்  அரசுத்துறை கட்டமைப்பு காக்கப்பட வேண்டும். GDS ஊழியர்கள்  ஏழாவது ஊதியக் குழு வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும்,  CADRE  சீரமைப்புத் திட்டம் மேலும் காலதாமதம் செய்யப்படாமல் உடன் நிறைவேற்றப் படவேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார்.  NFPE  அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன் நன்றி கூற  , கூட்டம் இனிதே நிறைவுற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே பார்க்கவும்.