Tuesday, August 11, 2015

CONGRATS TO THE NEWLY ELECTED OFFICE BEARERS OF GUDIYATHAM AND ARNI BRANCHES

குடியாத்தம் கிளை மாநாடு 

கடந்த 02.08.2015 அன்று குடியாத்தம் தலைமை அஞ்சலக வளாகத்தில் அஞ்சல் மூன்று குடியாத்தம் கிளை மாநாடு சிறப்பாக நடைபெற்றது . மாநாட்டில் அகில இந்திய சங்கத்தின் முன்னாள் செயல் தலைவர் தோழர். N .G , அகில இந்திய சங்கத்தின் உதவி பொதுச் செயலரும் மாநில நிதிச் செயலருமான தோழர். A . வீரமணி  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநாட்டில் கீழ்க் கண்ட தோழர்கள்  நடப்பு ஈராண்டு காலத்திற்கான நிர்வாகிகளாக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அவர்களின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள் !

தலைவர்  :  தோழர். R . சுப்பிரமணி 
கிளைச் செயலர் :தோழர். C . நெடுஞ்செழியன் 
நிதிச் செயலர் : தோழர். S . தீனதயாளன் 

ஆரணி  கிளை மாநாடு 

கடந்த 09.08.2015 அன்று அஞ்சல் மூன்று ஆரணி கிளை மாநாடு ஆரணி தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது. மாநாட்டில் அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர் KVS , மாநில நிதிச் செயலரும் , அகில இந்திய சங்கத்தின் உதவிச் செயலருமான தோழர். A . வீரமணி, மாநில உதவிச் செயலர் தோழர். S . வீரன் , திருவண்ணாமலை அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். பிச்சாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . மாநாட்டில் கீழ்க் கண்ட தோழர்கள் போட்டியின்றி நடப்பு ஈராண்டு காலத்திற்கு நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அவர்களின் பணி  சிறக்க அஞ்சல் மூன்று சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள் !

தலைவர் :    தோழர்.  R .C . செல்வம் 
கோட்டச் செயலர் : தோழர். M . சிவகுமார் 
நிதிச் செயலர் : தோழர். N . சுந்தரவடிவேல் 
============================================
ஆரணி கிளை மாநாட்டில் எடுக்க பட்ட சில புகைப்படங்கள்