Monday, August 24, 2015

FORMER CIRCLE SECRETARY COM. N.T. RAJAN BREATHED HIS LAST !

                     

 கண்ணீர்  அஞ்சலி !


அஞ்சல் தொழிற்சங்க இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் தமிழக அஞ்சல்  மூன்று மாநிலச் சங்கத்தின் முன்னாள் செயலருமான 

 தோழர் N .T.  ராஜன் அவர்கள்  

இன்று  மதியம்  இயற்கை எய்தினார் என்பதை  ஆழ்ந்த  வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இலாக்கா விசாரணைகளில் இவரது  வாதத் திறமையால் பயன் பெற்ற ஊழியர்கள்  ஏராளம்.  தோழர்.  பிரமநாதன் அவர்களுடன்  இணைந்து   பணியாற்றியவர் இவர் என்பது  குறிப்பிடத் தகுந்தது.

இவரின் பூத உடலுக்கான இறுதிச் சடங்கு  கீழ்க் கண்ட  முகவரியில்  நடைபெறும் என்பதை  தெரிவித்துக் கொள்கிறோம்.

PLOT NO. 8, KALAIMAGAL II STREET, 
PUZHUTHIVAAKKAM,
CHENNAI 6000 091.

அன்னாரது பிரிவால்  வாடும் அவர்தம்  குடும்பத்தாருக்கும் , இயக்கத் தோழர்களுக்கும்  நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் மறைவிற்கு அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின்  கொடி  தாழ்ந்த  அஞ்சலி !