Saturday, August 22, 2015

POSTAL WORKERS ARE THE COLONIAL SLAVES OF THE NEO LIBERALISATION !


சுதந்திர தேசத்தின் நவீன  கொத்தடிமைகளா அஞ்சல் துறை ஊழியர்கள் ? 
தாராளமயத்தின் புதிய அவதாரமா  நவீன  அஞ்சல்  காலனித்துவம் ?

பொதுத்  துறையான  வங்கித் துறையில் பணியாற்றும் சுமார் 6,20,000 வங்கி ஊழியர்களுக்கு  மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில்  முழு விடுமுறை அளிக்க  மத்திய அரசு  ஒப்புதல் அளித்து  எதிர்வரும் செப்டம்பர் 1 முதல் இதனை அமலாக்க உத்திரவும் அளித்துள்ளதாக வெளியான  செய்தியை  கீழே  பார்க்கவும் .

ஏற்கனவே பொதுத்துறை வங்கிகள் சனிக்கிழமை அன்று அரை நாள் மட்டுமே  பணியாற்றுகின்றனர்.  அவர்களிடமும்  CBS , ONLINE  சேவை, ATM  என்று  பல்வேறு தொழில் நுட்ப முன்னேற்றங்கள் வந்து  MANUAL  RECORD  பராமரிப்பது நின்று  பல காலம்  ஆகிறது.

ஆனால் ,  வங்கிகளை பார்த்து  நம்மிடமும் வங்கி  துவக்க வேண்டும் என்றும்  PO SB யை  விரிவாக்க வேண்டும் என்றும் நாட்டின்  மூலை முடுக்குகளிலெல்லாம்  பரவிக் கிடக்கும் 1,55,000 அஞ்சலகங்கள் மூலம் இந்த  சேவையை   சிறப்பாக செய்ய வேண்டும் என்று  கூறும் நமது அதிகாரிகள் , 

1) COUNTER  பணி  நேரத்தை  தன்னிச்சையாக ஆங்காங்கே  நீட்டித்து  உத்திரவு  இடுகிறார்கள் .

2) சனியன்று  இனி முழு  நாளும்  COUNTER  வேலை  செய்ய  வேண்டும் என்று  உத்திரவு  இடுகிறார்கள் .

3)"24 மணி  நேரத்தில்  DELIVERY " என்று  E -COMMERCE  கம்பனிகளிடம் தன்னிச்சையாக ஒப்பந்தம் போட்டு  ஞாயிறு மற்றும்  மதப் பண்டிகை நாட்களில் கூட DELIVERY  செய்திட  பணிக்கு  வரவேண்டும் என்று உத்திரவு  இடுகிறார்கள்.

இதுதான்  " MODEL  EMPLOYER " போலும் . வங்கித்துறையைப் பார்த்து மாற்றங்களைக் கொண்டு வருகிறோம் என்று கூறிக் கொள்ளும்  நம் துறை  அதிகாரிகள் , வங்கித்துறையில் இருக்கும் சலுகைகளை   நம் ஊழியர்களுக்கு  கொண்டு வர மறுப்பது  ஏன் ? இருக்கும்  உரிமைகளையும்  படிப்படியாக  பிடுங்குவது  ஏன் ? 

நவீன காலனியாதிக்கத்தின்  புதிய அடிமைகளாக அஞ்சல் துறை ஊழியர்களை மாற்றுவது  ஏன் ?  சிந்திப்பார்களா  அல்லது கொத்தடிமை அரசாங்கம்  நடத்துவார்களா ?

அதிகாரிகளின்  சிந்தனைக்கே விடுகிறோம் . 
--------------------------------------------------------------------------------------------------------------------------

NEW DELHI: Bringing cheers to lakhs of bank employees, the government has accepted the long-pending demand of workers to declare second and fourth Saturdays holidays, with effect from September 1.


"The notification regarding Saturday off has come. It is effective from September 1," All India Bank Employees' Association (AIBEA) General Secretary C H Venkatachalam told PTI. 

At present, all PSU and private sector banks work half-day on Saturdays. 

"This is a welcome move. This will be a big relief to employees and I hope that this will improve the productivity of employees," he said. 

In case of a month having five Saturdays, banks will be closed only on second and fourth 
Saturdays.
--------------------------------------------------------------------------------------------------------------------------