Friday, October 21, 2016

FIRST ANNIVERSARY ON THE DEATH OF OUR GREAT LEADER COM. N. BALU , EX- CIRCLE SECRETARY, TAMILNADU P3 CIRCLE UNION

'அண்ணன்'  என்று பேரன்போடும்  'அஞ்சா நெஞ்சன்' என்று பேருவகை யோடும் அண்ணனைப் பற்றி நாம் நினைவு கொள்ள , ஆம்  ! ஓராண்டு முடிந்ததையா ! மாவீரன்  இந்த மண்ணுலகை விட்டு சென்ற பின்னே ! 

அண்ணனின் தம்பி மார் செயங்கொண்டார்  பாடிய
 'கலிங்கத்துப் பரணி'  போல -


"பொருதடக்கை வாளெங்கே மணிமார் பெங்கே
 போர்முகத்தி லெவர்வரினும் புறங்கொ டாத

       பருவயிரத் தோளெங்கே யெங்கே யென்று" 

புலம்பி அழுகின்ற  நிலை காணீர் .....

      "அண்ணனே  நீ வருவாய்  என்று  காத்திருந்தோம் !
      நீ  வரமாட்டாய்  ... வரவில்லையெனில் உன் இதயத்தை 
      இரவலாகத் தந்திடு அண்ணா "

என்று  அண்ணனுக்கு இரங்கற்பா  எழுதிய  தம்பி போல கேட்கிறது  எம் இதயம் ! அண்ணனே !  எம்  இதய மன்னனே !  உன் இதயத்தை தந்திடு எமக்கு ! போர் முகத்தில்  எவர் வரினும் புறங்கொடாத இதயம் வேண்டும் எமக்கு ! தந்திடு அண்ணா !  எம்  இதய மன்னா !

அண்ணனின் மறைவை ஒட்டி  கடந்த ஆண்டு தமிழ் மாநில அஞ்சல்  மூன்று சங்கத்தினால் வெளியிடப்பட்ட " கவிதாஞ்சலி "  கீழே  காண்க :-